Saturday, June 12, 2010

சொர்க்கம் எங்கே...?

ரயில் நிலையத்தில் போடப்பட்ட மர பெஞ்சில் உக்கார்ந்து திறு திறுவென விழித்துக் கொண்டு இருந்தான்... நேரத்தையும், டிங்-டாங் என்ற சத்தத்திற்குப் பிறகு ஒலிக்கும் அறிவிப்பாளரின் குரலையும் ஒரு வித படபடப்போடு கவனித்துக் கொண்டிருந்தான்.."இன்னும் பத்து நிமிடத்தில் அவர் சொன்ன 'அந்த' ரயில் வந்து விடும்... இரவு கனவில் நடந்ததெல்லாம் உண்மையா...?கடவுள் வந்தது உண்மைதானா..? எனக்கு மட்டும் காட்சி தந்தது ஏன்...? நமக்கு மாற்றம் பிறக்குமா...? இன்னும் பத்து நிமிடத்தில் தெரிந்து விடும்.. என்று நினைத்துக் கொண்டே அதிகாலையில் வந்த கனவினை அசை போட்டான்...

தினம் பத்து ருபாய் சம்பாரித்த பொது கூட அதை முழு சந்தோஷத்துடன் அனுபவித்தேன், இப்போது நல்ல வேலை, கை நிறைய பணம், வாழ்க்கையின் அடுத்த அந்தஸ்துக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன்.. பர்ஸ் முழுக்க டெபிட் கார்டுகளும், கிரெடிட் கார்டுகளும் பிதுங்கிக் கொண்டு நிற்கின்றன.. ஆனால் முன்பிருந்த சந்தோஷம்...? வெளிநாட்டுக் காரர்கள் போல், ஒரு வயதுக்கு மேல், தனியாக வாழ்ந்தால் எப்படி இருக்கும்..? எதற்காகவும் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டியதில்லை.. யாருக்கும் அடிபணிய வேண்டியதில்லை.. சம்பாதித்த காசை "நிம்மதியாக" அனுபவிக்கலாம்.. ஆனால், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பிறந்ததே நான் செய்த பாவம்..

பத்தாயிரம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் சுலபத் தவணையில் பைக் வாங்கினேன்... தேவையான ஒன்று தான்... வீடு கட்டலாம் என்று வீட்டில் யாரோ பேச்சு ஆரம்பிக்க ஆரம்பித்தது வினை.. செலவு மேல் செலவு.. சம்பள உயர்வு வந்தது கடன் கொடுத்தவர்களுக்கு மட்டுமே சந்தோஷம் அளிக்கிறது.. லோன் கிடைப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள், டெலிபோன் பில், கரண்ட் பில், இன்டர்நெட் பில், கிரெடிட் கார்டு பில், லோன் மாதச் செலவு, ஆக நான் சம்பாதித்ததில் என் வாய்க்குக் கிடைப்பது சொற்பமே..

நம் நாட்டு மக்கள் கவுரவத்திர்காகவே கடைசி வரை வாழ்ந்து அழிபவர்கள்.. வறட்டுக் கவுரவம்.. ஐயாயிரம் ரூபாய் கம்பெனியில் வேலை பார்த்தபோது, கல்யாணம் காது குத்துகளுக்கு ஐம்பது ருபாய் மட்டுமே செலவு.. ஆனால் இந்தக் கம்பெனியில் எல்லோரும் நிறைய சம்பாதிக்கிறார்கள்.. அனால் ஒவ்வொருவரின் பிறந்த நாளுக்கும் குறைந்தது நூறு ருபாய் பணம் செலவு செய்ய வேண்டும், மாதம் இரண்டு அல்லது மூன்று முறை வெளியில் பெரிய உணவு விடுதியில் மதிய உணவிற்குச் செல்ல வேண்டும்.. இப்போதெல்லாம், சாதாரண ரோட்டுக் கடைகளிலேயே ஐம்பது ருபாய் இல்லாமல் எதுவும் சாப்பிட முடியாது.. ரெஸ்டாரன்ட்டுகள் என்றால் சொல்ல வேண்டுமா...?ஒரு ஆறு அல்லது ஏழு பேர் போனால், ஆயிரம் ரூபாய் இல்லாமல் திரும்ப வர முடியுமா....? ஆக வாரம் இருமுறை கையிலிருந்து இரண்டு மூன்று நூறு ருபாய் நோட்டுகள் வெளியில் செல்லும் வழியே தெரிவதில்லை..


நண்பர்களோடு சுற்றுலா போயிருந்த போது சிகப்புப் பூப்போட்ட சட்டையும், அரைக்கால் பேண்ட்டும் கண்ணில் குளிர் கண்ணாடியும், கழுத்தில் பெரிய காமிராவுடனும் சுற்றிக் கொண்டிருந்த அந்த வெள்ளைக்காரனைப் பார்த்ததும் பொறாமையாக இருந்தது.. தான் இரண்டு வருடம் சம்பாதித்த தொகையைக்கொண்டு இந்தியா வந்திருக்கிறான்.. இன்னும் ஆறு மாத காலம் வேறு சில நாடுகளுக்கும் சுற்றுலா செல்ல இருக்கிறானாம்.. கையிலிருக்கும் பணம் செலவழிந்ததும் மீண்டும் தாய்நாடு சென்று ஏதாவது வேலையில் உடனடியாக இணைந்து பணம் சேர்க்க ஆரம்பித்து விடுவானாம்.. எந்த வேலையாக இருந்தாலும் பரவா இல்லையாம்... சந்தோஷம் மட்டுமே அவர்களது குறிக்கோள்.. அதற்காக நன்கு சம்பாரிக்க வேண்டும்.. இதில் ஒரு முக்கிய விஷயம் என்ன வென்றால் என்ன தொழில் செய்தாலும் அங்கே கவுரவக் குறைச்சல் இல்லை. படிப்பு என்பது அங்கே தொழிலுக்காகவும் இல்லை.. அது அறிவை வளர்த்துக் கொள்ள மட்டுமே..

அந்த வெள்ளைக் காரன் சொன்னான்,அங்கே கார் ட்ரைவராக இருக்கும் ஒரு ஐம்பத்தைந்து வயது மதிக்கத் தக்க நபர், ஏதோ பட்டப் படிப்பு படிக்கிறாராம்.. அவர் ஏற்கனவே பல பட்டங்களைப் பெற்றவர். படிப்பு என்பது அவருக்கு ஒரு பிடித்த விஷயம் அவ்வளவே..எவ்வளவு வேண்டுமானாலும் படிப்பாராம், ஆனால் ட்ரைவிங் என்பது அவருக்கு பிடித்த ஒரு தொழில், அதில் நிறைய ஓய்வு நேரம் கிடைப்பதாலும், குறைவான நேரத்தில், பணம் கிடைப்பதாலும் அந்தத் தொழிலில் இருக்கிறார்... ஆனால் நம்ம ஊரில், முதுகலைப் பட்டம் பெற்ற யாராவது கார் டிரைவராக வேலை பார்க்க ஒப்புக் கொள்வாரா...?

நம் மக்களின் செலவு..? அதுவும் பந்தா காட்டுவதற்காகவே.. பக்கத்து வீட்டுக் காரன், மற்றும் கூட வேலை பார்ப்பவன், அனைவரையும் பார்த்து தன்னுடைய நிலையையும் அவர்கள் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று நினைக்கின்றனர். .. அவர்கள் எல்லாரும் இரண்டு தலைமுறைக்கு முன்னர் இருந்தே பணம் படைத்தவர்களாக இருப்பர். ஆனால் மனித மனம் சும்மா இருக்காது. அது கிளைக்கு கிளை தாவும் ஒரு குரங்கைப் போன்றதாயிற்றே.. தான் இருக்கும் இடத்தை ஒப்பிட்டுப் பார்த்தே வாழ்பவன் ஆயிற்றே.. பத்து ருபாய் சம்பாதித்தால், இருபது ருபாய் சம்பாதிப்பவனை ஒப்பிடுவான், பத்தாயிரம் சம்பாதித்தால்....?

அந்த செலவு, இந்த செலவு, ஏகப்பட்ட பில்கள், கடன் என்று உழைத்துக் கிடைக்கும் பணம் அனைத்தும் பிடுங்கப்படுகிறது.. சுற்றம் சொந்தம் என அனைத்தும் பணத்தைக் கறக்கும் ஊடகமாகவே இருக்கின்றன.. நிம்மதி என்பது எங்கே... கடவுளே.. நீ உண்மையில் இருக்கிறாயா...? எங்கே இருக்கிறாய்...? என் முன்னால் வா... உண்மையான நிம்மதியைத் தா...என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்த அசரீரி குரல் கேட்டது... அதுவும் அவன் குரலிலேயே.. "நிம்மதி வேண்டுமானால், காலை போத்தனூர் ரயில் நிலையத்திற்கு வா.. சரியாக பத்து மணிக்கு இரண்டாவது தளத்திற்கு வரும் ரயிலின் இரண்டாவது பெட்டியில் ஏறு.. நிம்மதியை நான் உனக்கு காட்டுகிறேன்...". கனவு கலைய எழுந்து உக்கார்ந்த அவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.. ச்சே.. கனவா... அது தானே.. கடவுள் எப்படி நேரில் வருவார்..? அனால், கனவில் வந்த விஷயங்கள் துல்லியமாகவே இருக்கின்றனவே.. சோதித்துப் பார்ப்போமா...? நடக்காவிட்டால் என்ன நஷ்டம் ஏற்பட்டு விடப் போகிறது...?

நிகழ்காலத்திற்கு திரும்பி வந்தவனாய் கடிகாரத்தை மறுபடியும் பார்க்க மணி சரியாகப் பத்து அடிக்கவும், அந்த ரயிலின் கூ... சத்தம் கேட்டது.. முதல் பெட்டி முழுக்க பயணிகள் நிரம்பி வழிய இரண்டாவது பெட்டி யாருமற்று காலியாக வந்தது அவனுக்கு பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்தது.. சரி... வந்தது வந்தாயிற்று.. ஏறித்தான் பார்ப்போமே.. ஏறிய அடுத்த வினாடி, ஒளிவேகத்தில் ரயில் புறப்பட, அடுத்த சில வினாடிகளில், அவன் கண்முன்னாடி நகர்ந்த அதிசயங்கள் எழுத்தால் விவரிக்க முடியாதவையாக இருந்தன..

கண்விழித்துப் பார்த்த பொது, அழகான கடற்கரையில் இருந்தான், நீல நிற அலை வெள்ளை நிற நுரையோடு, காலை வருடிச் சென்றது, எழுந்து நின்றான், சுருக்கென்று குத்தாத இதமான வெயில், கரையின் ஓரத்திலேயே அழகான சோலை தெரிந்தது, இந்தப்புறம் பெரிய மலை பச்சைப் பசேல் என்று விரிந்து இருந்தது.. பனிக்கூட்டங்கள் அப்படியே அந்த மலையை வருடிச் சென்று கொண்டிருந்தது.. கரையை நோக்கி நடக்க ஆரம்பிக்க சில்லென வீசிய காற்று அவனுக்குள் ஏதோ ஒரு வித ஆனந்தத்தை உணர்த்தியது.. சற்றேன இடது புறத்தில் சில குரல்கள் கேட்க திரும்பினான். அவனது குழந்தைகள், மர நிழலில், ஈரமான மணலை வீடு போல் கட்டி விளையாடிக் கொண்டு இருந்தனர்.. அந்தப் பெரிய மரத்தின் கிளையில் ஒரு அழகான குடில் தெரிந்தது.. குடிலின் ஜன்னலின் வழியே அவன் மனைவி ஏதோ சமைத்துக் கொண்டு இருப்பது தெரிந்தது.. கண்ணில் பட்ட மரங்கள் அனைத்திலும் பழங்கள்..

அழகழகான விலங்குகள், பறவைகள், சுற்றிலும் ஒழி எழுப்பியபடி இருந்தன.. சுத்தமான தண்ணீர் ஊற்று ஒன்று மிக அருகில் கண்ணில் பட்டது.. கொஞ்சம் தொலைவில் மக்கள் வாழ்வதற்கான சத்தங்கள் கேட்டன.. உக்கார்ந்து சாப்பிட்டாலும் ஆயுள் முழுக்க சாப்பிடலாம்.. அந்த அளவுக்குப் பழங்கள், காய்கள்.. மலையை நோக்கி நடக்க ஆரம்பிக்க இன்னும் பல ஆச்சரியங்கள்.. அதிசயங்கள்.. காணக்கிடைக்காத மரங்கள், பறவைகள், பூச்சிகள், என்று விரிந்து கொண்டே இருந்தது... இலையை ஆடையாக உடுத்தியிருந்த அவனுடைய குழந்தைகளைப் பார்த்ததும் சட்டென்று அவனுக்கும் ஒரு சந்தேகம் வந்தது... தன்னையும் பார்த்துக் கொண்டான்.. இலையால் வேயப்பட்ட ஒரு ஆடையை உடுத்தி இருந்தான்.. சொர்க்கத்தைக் காட்டுவதாகக் கூட்டி வந்தாரே..? ஆனால் இங்கு கொண்டு வந்திருக்கிறார்...? சொர்க்கம் எங்கே...? கடவுள் எங்கே..?

திடீரென ஏதோ ஒரு எண்ணம் வந்தவனாய்... கடவுளே.. கடவுளே.. இது என்ன கனவா..? நீ எங்கே இருக்கிறாய்...? எனக் கேட்க, "என்ன ஆயிற்று உனக்கு..?" எனப் பதில் வந்தது... "நான் என்னுடைய வீட்டிற்குப் போக வேண்டும்....என் சட்டைப் பைக்குள் என்னுடைய பர்ஸ் இருக்கிறது.. அதை மட்டும் எடுத்து வர வேண்டும்.. அதில் தான் என்னுடைய அனைத்துக் கார்டுகளும், பணமும் உள்ளது..." என்று போட்டானே ஒரு போடு..

சட்டென்று அனைத்தும் தூசியாய் மறைந்து போக கட்டிலுக்குப் பக்கத்தில் தொம்மென்று விழுந்தான்... "ஏங்க... இத்தன நேரமா ஏங்க பொய் இருந்தீங்க..? கூரையைப் பிச்சிகிட்டு குதிச்ச மாறி திடீர்னு வந்துட்டீங்க.. சரி... உங்க பர்ஸ்ல இருந்து ஐநூறு ரூபாய் எடுத்துக்கறேன்.. மளிகைக் கடைக்குப் போகணும்.."என மனைவி சொன்னாள்...

மனிதன் எங்கிருந்தாலும் மனிதன் தான்... அவனுக்குச் சொர்க்கம் என்பது வெளியில் உள்ள ஒரு விஷயம்.. கிடைத்த சொர்க்கத்தை (நம் இயற்க்கை பூமியைத் தான் சொல்கிறேன்..) விட்டு விட்டு, உண்மையான சொர்க்கம் எங்கே என்று தேடிக் கொண்டு இருக்கிறோம்...

நரகத்திலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட நமக்கு சொர்க்கம் அருகில் இருந்தாலும் அதை உணரும் சக்தி இல்லை..

20 பின்னூட்டம்:

எல் கே said...

unmaithan

எண்ணங்கள் 13189034291840215795 said...

நம் நாட்டு மக்கள் கவுரவத்திர்காகவே கடைசி வரை வாழ்ந்து அழிபவர்கள்.. வறட்டுக் கவுரவம்.. சந்தோஷம் மட்டுமே அவர்களது குறிக்கோள்.. அதற்காக நன்கு சம்பாரிக்க வேண்டும்.. இதில் ஒரு முக்கிய விஷயம் என்ன வென்றால் என்ன தொழில் செய்தாலும் அங்கே கவுரவக் குறைச்சல் இல்லை. படிப்பு என்பது அங்கே தொழிலுக்காகவும் இல்லை.. அது அறிவை வளர்த்துக் கொள்ள மட்டுமே..


-----

மிக சரியா சொன்னீங்க...

கவுரவம் என்ற மன உளைச்சல் மட்டுமே மிச்சம்..

மனிதரை மனிதராய் பார்க்காமல் வசதி புகழ் கொண்டு பார்ப்பது..

நாடோடி said...

//நம் நாட்டு மக்கள் கவுரவத்திர்காகவே கடைசி வரை வாழ்ந்து அழிபவர்கள்.. வறட்டுக் கவுரவம்..///

இந்த‌ போலியான‌ ப‌க‌ட்டு வாழ்க்கை தான் அதிக‌மாகி கொண்டு வ‌ருகிற‌து...

சாமக்கோடங்கி said...

வாங்க LK,...

நன்றி புன்னகை தேசம்..

நன்றி நாடோடி.. நீங்கள் சொன்னது சரிதான்.. பகட்டு வாழ்க்கைக்குள் போகப் போக, நாம் நிம்மதியை விட்டு வெகு தூரம் போய்க கொண்டு இருக்கிறோம்.... என்பதே உண்மை..

Swengnr said...

அன்பு பதிவாளரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன். தயவு செய்து பார்த்து கமெண்ட் போடவும். நன்றி!

சுசி said...

//மனிதன் எங்கிருந்தாலும் மனிதன் தான்... //

அதேதாங்க பிரகாஷ் :((

Chitra said...

மனிதன் எங்கிருந்தாலும் மனிதன் தான்... அவனுக்குச் சொர்க்கம் என்பது வெளியில் உள்ள ஒரு விஷயம்.. கிடைத்த சொர்க்கத்தை (நம் இயற்க்கை பூமியைத் தான் சொல்கிறேன்..) விட்டு விட்டு, உண்மையான சொர்க்கம் எங்கே என்று தேடிக் கொண்டு இருக்கிறோம்...

நரகத்திலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட நமக்கு சொர்க்கம் அருகில் இருந்தாலும் அதை உணரும் சக்தி இல்லை..


....... "உண்மையை" சொல்லி இருக்கீங்க..... rightly said.

calmmen said...

உங்கள் தளம் மிக அருமை ,
என்னை தேடி வந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி

http://karurkirukkan.blogspot.com

Paleo God said...

அருமை பிரகாஷ்!

//நரகத்திலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட நமக்கு சொர்க்கம் அருகில் இருந்தாலும் அதை உணரும் சக்தி இல்லை..//

முற்றிலும் உண்மை.

இளங்கோ said...

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே.. !!
:)

சாமக்கோடங்கி said...

அன்பு software Engineer அவர்களே..

உங்கள் பதிவும் அருமை.. பின்னூட்டம் கேட்கும் எங்கள் தலைவர் கவுண்டமணி அவர்களும் ரொம்ப அருமை...

சாமக்கோடங்கி said...

வாங்க சுசி... ரொம்ப நன்றி..

சாமக்கோடங்கி said...

நன்றி சித்ரா... இன்பமும் துன்பமும் நம்முள் இருந்தே தொடங்குகிறது...

சாமக்கோடங்கி said...

வாங்க பாஸ் அவர்களே ... தொடர்ந்து வாங்க..

சாமக்கோடங்கி said...

ஷங்கர் அண்ணே.. வாங்க.. என்ன பண்றது.. நமக்குக் கொடுத்த அதே வரத்தைத் தான் இறைவன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கொடுத்துள்ளான், ராஜபக்ஷேவுக்கும் கொடுத்துள்ளான்.. அதை நாம் எப்படி உபயோகப் படுத்துகிறோம் என்பதைப் பொறுத்ததே நம் வாழ்க்கை..

இதில் ஒரு விஷயம் என்னவென்றால், நிறைய பேர் வரத்தைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்கிறார்கள்..

சாமக்கோடங்கி said...

//இளங்கோ said...

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே.. !!
:)
//

இன்னும் எத்தனையோ பேர் இதை விட நிறைய சொல்லி விட்டுப் பொய் இருக்கிறார்கள்.. நாமாக உணரும் வரை யார் சொல்லியும் எந்த பிரயோசனமும் இல்லை.. என்ன சொல்றீங்க இளங்கோ...

மரா said...

இதுக்குபேருதான் ”நாயக் குளிப்பாட்டு நடுவூட்ல வெச்சாலும் வாலை....” ன்னு சொல்றதா பாஸ். என்னமோ போங்க. ஒரு நல்ல ஃபேண்டஸி மாதிரி கொண்டுபோய் பொசுக்குனு முடிச்சிட்டீங்க. நல்ல நடை.

ஜெய்லானி said...

////நம் நாட்டு மக்கள் கவுரவத்திற்காகவே கடைசி வரை வாழ்ந்து அழிபவர்கள்.. வறட்டுக் கவுரவம்..///

கவுரவப்பிரச்சனை ஆச்சே !!!


சும்மா நச்சுன்னு சொல்லி இருக்கீங்க..!!

சாமக்கோடங்கி said...

//மயில்ராவணன் said... //

வாங்க மயில்றாவணன்... நானா பொசுக்குன்னு முடிக்கணும்னு நெனைக்கல.. நான் நெனைச்ச விஷயம் அப்படி செஞ்சிடிச்சு... ரொம்ப நன்றிங்க... நான் எப்போதுமே இதுபோன்ற விஷயங்களைத் தான் சுத்திச் சுத்தி வருகிறேன்.."ஃபேண்டஸி" வேண்டுமானால் ஒருநாளைக்கு முயற்சி பண்றேன்..

சாமக்கோடங்கி said...

//ஜெய்லானி said...

////நம் நாட்டு மக்கள் கவுரவத்திற்காகவே கடைசி வரை வாழ்ந்து அழிபவர்கள்.. வறட்டுக் கவுரவம்..///

கவுரவப்பிரச்சனை ஆச்சே !!!


சும்மா நச்சுன்னு சொல்லி இருக்கீங்க..!!
//

இந்த நிலைமை மாறனும் ஜெய்லானி.. நாம் பகட்டுக்காக வாழ்வதை நிறுத்தியே ஆகா வேண்டும்... அந்த நாள் வரும் வரை... சொர்க்கம் என்பது ஒரு கற்பனையே...

ரொம்ப நன்றி வருகைக்கு...

Post a Comment