
அன்பு நண்பர்களே..
இன்று இந்த இடுகையை வெளியிட வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து இதை வெளியிடுகிறேன்..
தருமியின் பக்கத்தில் உள்ள இதை முழுமையாகப் படித்து விட்டேன்..
என் வீடு, என் சுகம், என் குடும்பம் என்று நாட்டு மக்களும் ஆட்சியாளர்களும் சுயநலப் பேய்களாகிய இந்த நேரத்தில், தன் உயிருக்குப் பாதிப்பு வருமா, தன் குடும்பம் குட்டிகளின் எதிர்காலம் பாதிக்கப் படுமா என்று சிந்திக்காமல், நாடு தனக்கு என்ன செய்துள்ளது என்று யோசிக்காமல், தன் மனசாட்சிக்கு மதிப்பளித்து துணிந்து பணியாற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்த உமாசங்கர் அய்யா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. உங்களைப் போன்றோர் பலர் நம் தாய் நாட்டுக்குத் தேவை..
சும்மா ஒரு போலீஸ் கான்ஸ்டபிளைப் பாத்து விட்டாலே தப்பே செய்யாமல் இருந்தால் கூட தொடை நடுங்கும் நம் சமூகத்தில், உண்மையைத் தெள்ளத் தெளிவாக, மன தைரியத்துடன் எழுதியுள்ள உமாசங்கர் போன்றோர் தான் நாளைய சமுதாயத்தின் ஆணிவேர்..
அது இப்போது ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.. ஆணிவேரை அசைத்துப் பார்க்கின்றனர்.. பிடுங்கவும் முயற்சிக்கின்றனர்.. ஆளுங்கட்சியிலும் ஊழல் பேர்வழிகள்... எதிர்க்கட்சியிலும் ஊழல் பேர்வழிகள்.. அதனால் தானோ என்னவோ ஊடங்களில் இந்த செய்தி அதிக அழுத்தத்துடன் வெளிவரவே இல்லை.. ஆம்.. தொலைத்தொடர்பு ஊடங்கள் எல்லாமே அரசியல் கட்சிகளின் கைப்பொம்மைகள் தானே.. ஆதாயத்துடன் இயங்கும் அவைகளிடம் ஞாயத்தை எதிர்பார்ப்பது நம் தவறு..
அதனால், எந்த வித ஆதாயமும் இன்றி, நல்ல விஷயங்களைப் பகிரும் இந்த வலை உலகில் உமஷங்கரின் மேல் எடுக்கப் படும் இந்தக் காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க விழைகிறேன்...
வலை உலகம் ஒரு மாபெரும் சக்தி.. நேரடியாக நாம் அரசிடம் கோரிக்கை வைக்காவிட்டாலும், நம்முடைய இந்த ஒற்றுமை அவர்களை இந்தப் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் என்றே நம்புகிறேன்...
உமாசங்கர் அவர்களுக்கு ஆதரவாக பல பேர் இருக்கின்றனர் என்பதை இதன் மூலம் நாம் ஊடகத்திற்கு உணர்த்துவோம்.. அவர் மீண்டும் பதவியேற்று ஊழல் பேர்வழிகள் அனைவரையும் தோலுரிக்க வேண்டும் என்பதே நல்லுள்ளங்களின் ஆசை..
மேலும் விவரங்கள் அறிய..
http://valpaiyan.blogspot.com/2010/08/blog-post_18.html
http://pattapatti.blogspot.com/2010/08/blog-post_18.html
ஊர் கூடி தேர் இழுப்போம்... இழப்பதற்கு ஒன்றும் இல்லை.. ஆனால் காண்பிக்க நம் ஒற்றுமை இருக்கிறதல்லவா... வாருங்கள்..
பிரகாஷ் (எ)சாமக்கோடங்கி |