Thursday, October 28, 2010

நான் தீவிரவாதி..

சனிக்கிழமை ராத்திரி பத்தரை மணிக்கு தான் எனக்கு பிரான்க்புர்ட்டில் இருந்து இந்தியாவிற்கு விமானம்... காலை அதிவேக ரயிலில் ஏறி மதியம் பணிரண்டரை மணிக்கெல்லாம் விமான நிலையம் எட்டி விட்டேன்.. உடன் வந்தவர் மூன்று மணி விமானத்திற்காகச் சென்று விட, தனியாக பத்தரை மணி வரை அங்கேயே கழிக்க வேண்டிய கட்டாயம்.. கொஞ்சம் வெளியில் எங்கேயாவது உலவி விட்டு வரலாம் என்றால் முதுகில் ஒரு பை, கையில் அலுவலக மடிக்கணினி, அப்புறம் பெரிய மற்றும் சிறிய ட்ராலி பெட்டிகள். அவைகளைப் பாதுகாப்பு அறைக்குள் வைத்து விட்டுச் செல்வது உசிதமாகப் படவில்லை, மற்றும் வெளியில் சென்றால் சரியான சமயத்திற்குச் சென்று திரும்பி வர வேண்டும். கையில் வைத்திருக்கும் பர்ஸ், பாஸ்போர்ட் சகிதங்கள் தொலைந்தும் விடக் கூடாது. நண்பர்கள் நிறையக் கூறி இருந்ததால் மொழி தெரியாத ஊரில் விபரீத முயற்சி கூடாது என்று அங்கேயே உக்கார்ந்து விட்டேன்..


சும்மா உக்கார்ந்து அங்கேயும் இங்கேயும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.. வருகின்ற போகின்ற போலீஸ்காரர்கள் எல்லாரும் ஒரு தீவிரவாதியைப் பாக்குற மாறியே பாத்துகிட்டு இருந்தாங்க.. பக்கத்தில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பயணி வந்து கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தார்.. பார்ப்பதற்கு இரண்டு பெரும் சேர்ந்து கள்ளக் கடத்தல் செய்வதுபோல் தோன்றி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. இரண்டு போலீசார் நேராக எங்களிடத்தில் வந்து எங்களிடம் பாஸ்போர்ட்டை கேட்டனர்.. எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டுச் சென்று விட்டனர்.. அந்த ஆப்பிரிக்க பயணியும் சென்று விட இதே போல் மேலும் இரண்டு முறை தனித்தனி போலீஸ் குழுவினர் என்னுடைய பாஸ்போர்ட்டை சோதனை செய்து விட்டனர்.. ஏன் என்னை மற்றும் இப்படி சோதனை செய்கிறார்கள் என்று யோசித்தேன்..

கொஞ்ச நேரம் கழித்து தான் புரிந்தது.. சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சாப்பிடுதல், அருகில் உள்ளவர்களிடம் சிரித்துப் பேசுதல், உலாவுதல் போன்ற ஏதாவது செயலைச் செய்து கொண்டிருந்தனர். நான் மட்டும் தான் சும்மா உக்கார்ந்து இருந்தேன். சும்மா உக்கார்ந்தால் கண் சும்மா இருக்காது. சுற்றி முற்றி பராக் பார்த்துக் கொண்டிருக்கவும் தான் அவர்களுக்குச் சந்தேகம் வந்தது.

அப்புறம் என்ன..? நான் கையோடு கொண்டு சென்றிருந்த ராஜேஷ்குமார் கிரைம் நாவலை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்து விட்டேன். கடிகாரம் உள்பட அனைத்தும் மெதுவாக நகர்வதாக உணர்ந்த நேரத்தில் ஜெட் வேகத்தில் பாய்ந்தோடியது அவர் எழுத்து. எப்படியோ ஒரு நாவலைப் படித்து முடித்த போது ஒரு மணி நேரம் ஓடி இருந்தது.. அட, இந்த இடைவெளியில் குறைந்தது இருபது போலீசாராவது என்னைக் கடந்து சென்றிருப்பர்.. ஆனால் ஒருத்தர் கூட என்னைச் சோதிக்க வில்லை.

அடுத்த புத்தகத்தை எடுத்தேன். ராஜேஷ்குமார் எப்போதும் தன்னுடைய நாவலின் அத்தியாயங்களுக்கு இடையே நல்ல பல அறிவியல் தகவல்களைக் கொடுப்பார். உதாரணத்திற்கு எந்தெந்த வியாதிகளுக்கு என்னென்ன மருந்துகள், மற்றும் ஸ்டெம் செல்களினால் ஏற்படும் பலன்கள் என்னென்ன போன்றவை. என்னுடைய இரண்டாவது புத்தகம் ஒரு ராணுவ சம்பந்தப் பட்ட கதை. அதனால் ஒவ்வொரு அத்தியாயத் துவக்கத்தின் போதும் ஒரு வித்தியாசமான துப்பாக்கி வகையின் படத்தைப் போட்டு அதன் விளக்கத்தைக் கொடுத்திருந்தார்.. ரத்த ஓட்டத்தைப் போன்ற விறுவிறுப்பான கதை.

பாதி படித்து முடித்திருந்த போது பின்பக்கம் யாரோ நிற்பதை உணர்ந்தேன். திரும்பிப் பார்க்க இடுப்பில் கைவைத்துக் கொண்டு ஆஜானுபாகுவான ஒரு போலீஸ் நின்று கொண்டிருந்தார்.. ஏன் என்னை இப்படிப் பார்க்கிறார்.. நான் என்ன தவறு செய்தேன் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் தான் உணர்ந்தேன். எல்லாம் நாவல் பண்ணிய பிரச்சினை. அதிலிருந்த துப்பாக்கிப் படம் அவர் கவனத்தைத் திருப்பி இருக்க வேண்டும். கசகச போல சர்ச்சைக் குரிய பொருட்களைக் கொண்டு வந்து விமான நிலையத்தில் மாட்டிக்கொண்டு விளக்கவும் முடியாமல் தூதரக ஆதரவும் இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் அனைவரும் வரிசையாக என் மனக்கண் முன்னால் வந்து சென்றனர்.

லேசாக சிரித்து விட்டு, மேலும் இரண்டு பக்கங்களைப் புரட்டினேன்.. என் கேட்ட நேரம் மறுபடியும் அடுத்த பெரிய ராக்கெட் லாஞ்சர் வகை துப்பாக்கியின் படம் போட்டு வருணிக்கப் பட்டு இருந்தது. அப்படியே லேசாக மூடி அட்டைப் பக்கம் தெரியுமாறு கையில் வைத்துக் கொண்டேன். அதில் "கிரைம்" மற்றும் "ராஜேஷ்குமார்" என்று கோட்டை எழுத்தில் எழுதி இருந்தது. ஆனால் தமிழில்..

தம்பி சாமக்கோடங்கி.. ஏதோ உனக்கு நல்ல நேரம்.. அவர் அப்படியே நகர்ந்து சென்று விட்டார். அப்புறம் என்ன.. அங்கே உக்காரவே இல்லை. "பொன்னை விரும்பும் பூமியிலே.. என்னை விரும்பும் ஓருயிரே.." பாடல் ஸ்டைலில் என்னுடைய உடமைகள் அனைத்தையும் ஒரு சக்கர வண்டியில் (உபயம்: பிரான்க்புர்ட் விமான நிலையம்) வைத்து உருட்டிக் கொண்டே அங்கே சுற்றி வர ஆரம்பித்தேன். ஏழு மணி அளவில் செக்-இன் கவுண்டர் திறக்கப்படவும் தமிழ்நாட்டுக்காரர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்(முகத்தை வைத்து தமிழ்நாட்டுக்காரராகத் தான் இருக்க வேண்டும் என்றொரு ஊகம்). சுற்றி வருகையில் மறுபடியும் அவர் கண்ணுக்குப் பட கேட்டே விட்டேன். அவர் கோயம்புத்தூர்காரர் என்று தெரிந்ததும் என்ன ஒரு குதூகலம்... அப்புறம் என்ன.. நேரம் போனதே தெரியவில்லை.


பி.கு :

1.மொழி தெரியாத இடங்களில் நமக்கு முன் அனுபவம் இல்லாத சமயங்களில் சற்று அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நலம். குறிப்பாக விமான நிலையங்களில்.

2.ப்ரான்க்புர்ட் மற்றும் துபாய் விமான நிலையங்களில் சட்டை, பேன்ட்டைத் தவிர காலணி உட்பட அனைத்தையும் கழற்றிச் சோதனை போட்டனர். ஆனால் பெங்களுரு விமான நிலையத்தில் கைப்பைகள் மட்டுமே சோதனை செய்யப் பட்டன. கோட்டுகள் மேலங்கிகள் எதுவும் சோதனை செய்யப் படவில்லை. எனக்கு முன்னால் ஒரு பத்து பேர் நிற்கும்போது அந்த ஸ்கேன் சோதனைக்கருவி செயல்படாமல் போனது. இரண்டு சோதனை அதிகாரிகளில் ஒருவர் வாக்கி டாக்கியுடன் வெளியில் பேசிக்கொண்டே அவசரமாகச் சென்றார். இன்னொருவர் அந்தக் கருவி சரியாகும்வரை எங்களை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் உக்கார்ந்தே இருந்தார். அனைவரும் சோதனை செய்யப்பாடாமலேயே பெங்களுருவிற்குள் அனுமதிக்கப்பட்டோம்.

3.கோபத்தைக் கட்டுப்படுத்த ராஜேஷ்குமார் கூறிய ஒரு வழி: நீங்கள் ஓடும்போது கோபப் படுகிறீர்களா...? வேகத்தைக் குறைத்து நடக்கத் தொடங்குங்கள்.. நடக்கும்போது கோபப் படுகிறீர்களா..? வேகத்தைக் குறைத்து உக்கார்ந்து விடுங்கள்.. உக்கார்ந்து இருக்கும்போது கோபப் படுகிறீர்களா...? படுத்து ஓய்வெடுங்கள்.. (அதாவது கோபம் வரும்போது நிதானியுங்கள்).

ஓய்வெடுக்கும்போது கோபப் படுகிறீர்களா...? நல்ல ஒரு மருத்துவரைப் பாருங்கள்.. ஹி ஹி.. இது நான் சொன்னது..

நன்றி
சாமக்கோடங்கி

32 பின்னூட்டம்:

Chitra said...

சுவாரசியமாக இருந்தது.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல்

எல் கே said...

//ஓயவேடுக்கும்போது கோபப் படுகிறீர்களா...? நல்ல ஒரு மருத்துவரைப் பாருங்கள்.. ஹி ஹி.. இது நான் சொன்னது..//

heheh

ரோஸ்விக் said...

மருத்துவரைப் பாக்கும்போது கோபப்படா என்ன பிரகாஷ் செய்யுறது?? ;-)

Paleo God said...

ரோஸ்விக் said...
மருத்துவரைப் பாக்கும்போது கோபப்படா என்ன பிரகாஷ் செய்யுறது?? ;-)//

பர்ஸ பார்க்கவேண்டியதுதான் ( நர்ஸ் இல்லைங்க பர்ஸ் பர்ஸ்) :))

ஜெயந்த் கிருஷ்ணா said...

கலக்கலுங்கோ..

அந்நியன் said...

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்

பொன் மாலை பொழுது said...

i pod ஐ சார்ஜி பன்னி வைத்துக்கொண்டு பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கலாம். அதே நேரம் நாம் வெளியில் வேடிக்கை பார்த்தாலும் தவறாக என்ன வழி இல்லை. நான் இபடித்தான் செய்வது வழக்கம். நேரமும் போகும். மனதும் உற்சாகமாக இருக்கும். தேவையற்ற தொல்லைகள் தொடராது.

செல்வா said...

பெங்களூர்ல இப்படிஎல்லாமா சோதனை பண்ணுறாங்க ..

//ஓயவேடுக்கும்போது கோபப் படுகிறீர்களா...? நல்ல ஒரு மருத்துவரைப் பாருங்கள்.. ஹி ஹி.. இது நான் சொன்னது..
///

நீங்க சொன்னது நல்லாத்தான் இருக்கு ..

மங்குனி அமைச்சர் said...

அந்த ஊரு போலீசுக்கேல்லாம் அறிவே இல்லை , பாரு ஒரு தீவிர வாத்திய தப்பிக்க விட்டு இருக்காங்க

சாமக்கோடங்கி said...

//Chitra said...

சுவாரசியமாக இருந்தது.
//

நன்றி சித்ரா... இதுதான் என் முதல் வெளிநாட்டுப் பயணம்.. பலமுறை சென்று வந்தவர்களுக்குத் தானாக தைரியம் வந்திருக்கும்.. எல்லாம் பழக்கப் படும்போது பெரிதாகத் தெரியாது...

சாமக்கோடங்கி said...

//பட்டாபட்டி.. said...

கலக்கல்
//

நன்றி..

சாமக்கோடங்கி said...

//LK said...

//ஓயவேடுக்கும்போது கோபப் படுகிறீர்களா...? நல்ல ஒரு மருத்துவரைப் பாருங்கள்.. ஹி ஹி.. இது நான் சொன்னது..//

heheh
//

நன்றி.. எல்கே...

சாமக்கோடங்கி said...

//ரோஸ்விக் said...

மருத்துவரைப் பாக்கும்போது கோபப்படா என்ன பிரகாஷ் செய்யுறது?? ;-)
//

ஓட ஆரம்பியுங்க.... ;-)

நன்றி ரோஸ்விக்

சாமக்கோடங்கி said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ரோஸ்விக் said...
மருத்துவரைப் பாக்கும்போது கோபப்படா என்ன பிரகாஷ் செய்யுறது?? ;-)//

பர்ஸ பார்க்கவேண்டியதுதான் ( நர்ஸ் இல்லைங்க பர்ஸ் பர்ஸ்) :))
//

இதுல எந்த உள்குத்தும் இல்லையே...

சாமக்கோடங்கி said...

//வெறும்பய said...

கலக்கலுங்கோ..
//

வாங்க வெறும்பய....

சாமக்கோடங்கி said...

//அந்நியன் said...

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்
//

வணக்கம் அந்நியன்..

சாமக்கோடங்கி said...

//கக்கு - மாணிக்கம் said...

i pod ஐ சார்ஜி பன்னி வைத்துக்கொண்டு பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கலாம். அதே நேரம் நாம் வெளியில் வேடிக்கை பார்த்தாலும் தவறாக என்ன வழி இல்லை. நான் இபடித்தான் செய்வது வழக்கம். நேரமும் போகும். மனதும் உற்சாகமாக இருக்கும். தேவையற்ற தொல்லைகள் தொடராது.
//

இது ஒரு நல்ல யோசனை.. மனதில் பயம் இல்லை என்றால் கண்ணில் பயம் தெரியாது..

சாமக்கோடங்கி said...

//ப.செல்வக்குமார் said...

பெங்களூர்ல இப்படிஎல்லாமா சோதனை பண்ணுறாங்க ..

//ஓயவேடுக்கும்போது கோபப் படுகிறீர்களா...? நல்ல ஒரு மருத்துவரைப் பாருங்கள்.. ஹி ஹி.. இது நான் சொன்னது..
///

நீங்க சொன்னது நல்லாத்தான் இருக்கு ..
//

எப்போதும் இப்படி தான் சோதனை செய்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை.. ஆனால் என்னுடன் வந்த நண்பர் தன்னுடைய முதுகுப் பையில் சிகரெட் லைட்டர் வைத்திருந்தார்.. வெளியில் வந்து தான் சொன்னார்..

இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம்..

சாமக்கோடங்கி said...

//மங்குனி அமைசர் said...

அந்த ஊரு போலீசுக்கேல்லாம் அறிவே இல்லை , பாரு ஒரு தீவிர வாத்திய தப்பிக்க விட்டு இருக்காங்க
//

வாத்தியா....? சரியாச் சொல்லுங்க மங்குனி... தீவிர வாந்தி...

சாமக்கோடங்கி said...

ஜெய்லானி அவர்களுக்கு ஒரு நன்றி...

நேற்று பதிவை முடித்து இன்ட்லி யில் ஏற்றுவதற்கு முன் சரியாக மின்தடை ஏற்பட்டு விட்டது..

pichaikaaran said...

கோபத்தைக் கட்டுப்படுத்த ராஜேஷ்குமார் கூறிய ஒரு வழி"

அது நல்ல வழி... பயனுள்ள தகவலை தருவதில் அவருக்கு நிகர் அவர்தான்...

சாமக்கோடங்கி said...

//பார்வையாளன் said...

கோபத்தைக் கட்டுப்படுத்த ராஜேஷ்குமார் கூறிய ஒரு வழி"

அது நல்ல வழி... பயனுள்ள தகவலை தருவதில் அவருக்கு நிகர் அவர்தான்...//

கடைசியா நான் ஒரு வழி சொன்னேனே... அதைப் பத்தி ஒண்ணும் சொல்லலியே...:-)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

இது மாதிரி என்னாகும் நடந்திருக்கு ......,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ஐயயோ போன கமெண்ட் ல ...,சொல்ல மறந்துட்டேன் ...,அது சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல ...,ஒரு போலீஸ் காரன் என்னை எதுக்கு கூட்டிட்டு போய் உக்காரவைச்சு ,டீ ,இட்லி ,சரவணா பவன் சாப்பாடு வாங்கி குடுத்தான்னு இது வரைக்கும் தெரியாது ...,சாயங்காலம் நீ கிளம்பலாம் தம்பி ன்னு சொல்லி அனுபிச்சிடான் ..,

குறிப்பு : நான் விழுப்புரம் கூட தாண்டினதில்லைங்கோ

சாமக்கோடங்கி said...

//ஐயயோ போன கமெண்ட் ல ...,சொல்ல மறந்துட்டேன் ...,அது சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல ...,ஒரு போலீஸ் காரன் என்னை எதுக்கு கூட்டிட்டு போய் உக்காரவைச்சு ,டீ ,இட்லி ,சரவணா பவன் சாப்பாடு வாங்கி குடுத்தான்னு இது வரைக்கும் தெரியாது ...,சாயங்காலம் நீ கிளம்பலாம் தம்பி ன்னு சொல்லி அனுபிச்சிடான் ..,//

இப்படித்தான் வடிவேலுவையும் ஒரு படத்துல ஒரு சின்னப் பையன் வா வான்னு கூட்டிட்டுப் போய் ஒரு வண்டிக்குள்ள வச்சு ஆப்பரேஷன் பண்ணீட்டு அனுபிச்சு விடுவான்... அந்த மாறி எதாச்சும் ஆயிடுச்சா பாருங்க...(உடம்புல பார்ட்ஸ் எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணுங்க..)

இளங்கோ said...

//ஓய்வெடுக்கும்போது கோபப் படுகிறீர்களா...? நல்ல ஒரு மருத்துவரைப் பாருங்கள்.. ஹி ஹி.. இது நான் சொன்னது..//

Great Prakash :) .

சாமக்கோடங்கி said...

வாங்க இளங்கோ...

கருத்துக்கு ரொம்ப நன்றி....

ஹுஸைனம்மா said...

ம்ம்.. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!!

இங்கயும் திடீர்னு இப்படி சோதனையெல்லாம் நடக்கும். நேத்து அமீரக விமானப் பாதுகாப்பு அதிகாரிகள், “விளையாட்டாகக்கூட பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வார்த்தைகளைக் கூறக்கூடாது; பொறுப்பற்ற வார்த்தைகளின்/செயல்களின் விளைவுகளை அவர்களே பொறுப்பேற்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்வா said...

ராஜேஷ்குமாரோட அர்த்தமுள்ள அரட்டையோட தீவிர ரசிகன் நான்...

உங்களுக்கு சோதனை மேல் சோதனை...

சாமக்கோடங்கி said...

// ஹுஸைனம்மா said...

ம்ம்.. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!!

இங்கயும் திடீர்னு இப்படி சோதனையெல்லாம் நடக்கும். நேத்து அமீரக விமானப் பாதுகாப்பு அதிகாரிகள், “விளையாட்டாகக்கூட பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வார்த்தைகளைக் கூறக்கூடாது; பொறுப்பற்ற வார்த்தைகளின்/செயல்களின் விளைவுகளை அவர்களே பொறுப்பேற்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
//

சரிதான். அதுவும் முதல் பயணத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நன்றி ஹுசைனம்மா..

சாமக்கோடங்கி said...

//கவிதை காதலன் said...

ராஜேஷ்குமாரோட அர்த்தமுள்ள அரட்டையோட தீவிர ரசிகன் நான்...

உங்களுக்கு சோதனை மேல் சோதனை...
//

நானும் ராஜேஷ்குமாரின் ரசிகன். நான் படித்த தமிழ் நாவல்களில் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் அவருடையதுதான். அவர் எழுத்தின் வேகம் அளவிட முடியாதது. அர்த்தமுள்ள அரட்டை அவரது சமூக அக்கறையின் வெளிப்பாடு. மேலும் கேள்வி பதில் பகுதியும் தூள் கிளப்ப்பும்.

நன்றி கவிதை காதலன்.

Post a Comment