Saturday, November 12, 2011

காஞ்சனாவில் பிடித்த பாடல்..

வணக்கம் நண்பர்களே..

சமீப காலமாக வருகின்ற பல படங்களின் பாடல் வரிகள் முக்கியத்துவம் பெறுவதும் இல்லை, அவற்றைப் பெரும்பாலானோர் கவனிப்பதும் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் சமீபத்தில் காஞ்சனா (முனி-2) படத்தில் வந்துள்ள "வெஞ்சினம் வெஞ்சினம் பொங்க விளையாட வரா காஞ்சனா" என்கின்ற பாடல் வரிகளும் இசையும், அதன் காட்சி அமைப்பும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. ஸ்ரீராம், MLR.கார்த்திகேயன் மற்றும் மாலதி ஆகியோர் குரல் கொடுக்க, கவிஞர் விவேகா, வெறி கொண்டு பழிவாங்க அலையும் ஒரு பேய்க்காக எழுதிய பாடல் இதோ..

------------------------------
கொடியவனின் கதையை முடிக்க
கொறவளையை தேடி கடிக்க
நாறு நாறா ஒடம்ப கிழிக்க
நடுத்தெருவில் செதற அடிக்க
புழுவப் போல நசுக்கி எறிய
புழிஞ்ச ரத்தம் தெளிச்சி நடக்க
துண்டு துண்டா நறுக்கி எறிய
துள்ள வெச்சு உசுர எடுக்க
சந்ததிக்கே அதிர்ச்சி கொடுக்க
சகல வித வதைகள் புரியவே....

வெஞ்சினம் வெஞ்சினம் பொங்க விளையாட வரா காஞ்சனா..
(கோவ பழத்த போல கண்ணு கோபத்துல செவக்கும் செவக்கும்)
யே வெட்டிய மரம் போல உன்ன சாய்க்க வரா காஞ்சனா..
(உதடு துடிக்க உடம்பு துடிக்க கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்)
கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட உன்ன கிழிச்செறிய போறா..
கதற கதற கதற உந்தன் கத முடிக்க போறா..
யே வந்துட்டா வந்துட்டா வந்துட்டா வந்துட்டா
வந்துட்டா வந்துட்டா டா.....

சூற காத்தப் போல வராடா..
யே சொடுக்குப் போட்டு அழிக்க வராடா...
ஆணும் பொண்ணும் கலந்து வராடா..
ஒன்ன பிரிச்சு மேய எழுந்து வராடா.. டேய் டேய் டே..ய்ய்ய்..

வெஞ்சினம் வெஞ்சினம் பொங்க விளையாட வரா காஞ்சனா..
(கோவ பழத்த போல கண்ணு கோபத்துல செவக்கும் செவக்கும்)
யே வெட்டிய மரம் போல உன்ன சாய்க்க வரா காஞ்சனா..
(உதடு துடிக்க உடம்பு துடிக்க கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்)

கபால மாலைகள் கழுத்தில் உருள
கண்களைப் பார்த்தாலே எவனும் மெரள
அகால வேளையில் வேட்டைக்கு வராளே
அதிரி புதிரி ஆச்சு..
அப்பளம் போலவே எதிரி நொறுங்க
அங்கவும் இங்கவும் உடல்கள் சிதற
எப்பவும் எங்கவும் காணாத ராட்சஷி
எதிரினில் வந்தாச்சே..
கொம்பேறி மூக்கணும் கோதுமை நாகனும்
கண்ணாடி விரிய(ன்) குட்டியும்
சாரைப்பாம்பும் சுருட்டை பாம்பும்
வெள்ளிக்கோல் வரைய நாகமும்
பவள பாம்பும் மண்ணுளி பாம்பும்
பசும் சாம்பல் தண்ணி பாம்பும்
குழி விரியனும் கட்டு விரியனும்
கூடி சீருதே..

சூற காத்தப் போல வராடா..
யே சொடுக்குப் போட்டு அழிக்க வராடா...
ஆணும் பொண்ணும் கலந்து வராடா..
ஒன்ன பிரிச்சு மேய எழுந்து வராடா.. டேய் டேய் டே..ய்ய்ய்..

உயிரேடுப்பேன்.. கத முடிப்பேன்..
உயிரேடுப்பேன்.. கத முடிப்பேன்..
கருவறுப்பேன் நான்...

ஹவ்வ ஹவ்வ ஹவ்வ ஹவ்வ..
ஹோ ஹோ ஹோ ஹோ...

கண்ணுல நெருப்பு பொறி பறக்குது
கைகளும் கால்களும் துடி துடிக்குது
பற்களும் பசியில் நற நறங்குது
குதர்ற நேரம் வந்தாச்சே..
வானமும் பூமியும் நடு நடுங்குது
வங்கக்கடல் போல காத்து உருமுது
சிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில்
செதச்சிட வந்தாச்சே...
சித்திரை வெய்யிலும் கலங்கி போகும்
செவப்போ இவ கண்ண பாத்து
அத்தனை திசையும் அதிர்ந்து போகும்
அடடா இவ வேகம் பாத்து
குதிர நதிகள் ஓட ஓட
உடலை இவ கிழிக்கப்போறா..
உதவ வேணாம் பயங்கரத்த காட்டப் போறா...

சூற காத்தப் போல வராடா..
யே சொடுக்குப் போட்டு அழிக்க வராடா...
ஆணும் பொண்ணும் கலந்து வராடா..
ஒன்ன பிரிச்சு மேய எழுந்து வராடா.. டேய் டேய் டே..ய்ய்ய்..

வெஞ்சினம் வெஞ்சினம் பொங்க விளையாட வரா காஞ்சனா..
(கோவ பழத்த போல கண்ணு கோபத்துல செவக்கும் செவக்கும்)
யே வெட்டியா மரம் போல உன்ன சாய்க்க வரா காஞ்சனா..
(உதடு துடிக்க உடம்பு துடிக்க கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்)

எடுத்த சபதம் முடிக்கும் வரையில் இமையில் ஏது உறக்கம் உறக்கம்
அடிக்கும் அடியில் மழையும் பறக்கும் குருதி நதியில் பூமி சிவக்கும்
அத்தனை எலும்பும் நொறுங்கும் நொறுங்கும்
பதறும் ஓசை அகிலம் விரும்பும்
மோதிய கோடரி முனைகள் உடையும்
ஒட்டிய உடல்கள் முழுதும் சிதறும்
கட்டிய கயிறு அறுந்து உதிரும்
கனவும் காணா வதைகள் நடக்கும்....
-------------------------------------------
இந்தப் பாடலின் காணொளி:
www.youtube.com/watch?v=bb4_uvZVc04

சாமக்கோடங்கி

2 பின்னூட்டம்:

MANO நாஞ்சில் மனோ said...

அந்த பாடலில் நடன அமைப்பு பயங்கரமாக இருக்கும்...!!!

Ruthraa said...

குதிர நதிகள் ஓட ஓட
உடலை இவ கிழிக்கப்போறா..
உதவ வேணாம் பயங்கரத்த காட்டப் போறா...
-----------------------------
இது இப்படி வரும்

உதிர நதிகள் ஓட ஓட
உடலை இவ கிழிக்கப்போறா..
உலக மகா பயங்கரத்த காட்டப் போறா..

ந.ராம் குமார்

Post a Comment